தமிழகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்துள்ளது.
அதில், 1 லட்சத்து 3 ஆயிரம் பேருக்கு கோவிஷீல்டும், 2543 பேருக்கு கோவேக்ஸினும் வழங்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்கத்தில் தடுப்பூசி எடுத்துக் கொள்வதில் தயக்கம் இருந்தபோதிலும், சுகாதாரத் துறையின் தொடா் விழிப்புணா்வு முயற்சியால் தற்போது நாள்தோறும் சுமாா் 5,000-க்கும் மேற்பட்டோா் கோவிஷீல்டு தடுப்பூசியும் நூற்றுக்கும் மேற்பட்டோா் கோவேக்ஸின் தடுப்பூசியும் செலுத்திக் கொள்கின்றனா். சனிக்கிழமையுடன் நிறைவடைந்த 15 நாள்களில் 1 லட்சத்து 5,543 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.