தூத்துக்குடி உதவி ஆய்வாளர் கொலை: சரணடைந்த முருகவேலை 5 நாள்கள் சிறையில் அடைக்க உத்தரவு

தூத்துக்குடி, ஏரல் காவல் நிலைய  உதவி ஆய்வாளர் பாலு கொலை வழக்கு தொடர்பாக விளாத்திகுளம் நீதிமன்றத்தில் சரணடைந்த முருகவேலை 5 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

தூத்துக்குடி, ஏரல் காவல் நிலைய  உதவி ஆய்வாளர் பாலு கொலை வழக்கு தொடர்பாக விளாத்திகுளம் நீதிமன்றத்தில் சரணடைந்த முருகவேலை 5 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலு சரக்கு வாகனத்தை மோதச் செய்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முருகவேல் என்பவர் தூத்துக்குடி மாவட்டம்  விளாத்திகுளம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். 

இந்நிலையில் முருகவேலை பிப்ரவரி 5ஆம் தேதி வரை தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி சிறையில் அடைக்க விளாத்திகுளம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சரவணகுமார் உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com