சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்து ஈரோடு-பவானி பிரிவு சாலை அருகே உள்ள தேவராயன் ஏரியில் மழை நீரை சேமிக்க சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் சார்பில் ஏரியில் வளர்ந்துள்ள சீமை கருவேலம் மரங்கள், களர் செடிகளை அகற்றும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சங்ககிரியை அடுத்துள்ள ஈரோடு-பவானி பிரிவு சாலை அருகே உள்ள தேவராயன் ஏரியில் மழை நீரை சேமிப்பதற்காக வளர்ந்துள்ள சீமை கருவேலம் மரங்கள், தேவையற்ற களர் செடிகளை சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் தலைவர் ஏ.ஆனந்தகுமார் தலைமையில் செயலர் ராகவன், பொருளாளர் கணேஷ், நிர்வாகிகள் முருகேசன், சரவணன், பன்னீர்செல்வம், வெங்கடேஷ், பொறியாளர் வேல்முருகன், பி.கார்த்திகேயன், தரணீஷ், தரணீதரன், சந்திரபாண்டியன் உள்ளிட்ட பலர் ஒன்றிணைந்து சீமை கருவேலம் மரங்கள், களர்செடிகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.
ஏரியின் பரப்பளவு அதிகமாக உள்ளதையடுத்தும், ஏரிக்கு வரும் தண்ணீர் பாதைகளையும், களர்செடிகளை முழுமையாக அகற்றும் வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இப்பணிகள் நடைபெற உள்ளதாக பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.