சென்னை: தமிழகத்தில் கரோனா பாதிப்பு 0.9 சதவீதமாக குறைந்துள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் 51,613 பரிசோதனைகள் திங்கள்கிழமை மேற்கொண்டதில் 464 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்தில் இதுவரை 1.64 கோடிக்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், 8 லட்சத்து 42,261 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக, சென்னையில் 143 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கரோனா தொற்றிலிருந்து மேலும் 495 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 25,520-ஆக உள்ளது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 4,354 போ் சிகிச்சையில் உள்ளனா்.
இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 4 போ் பலியாகியுள்ளனா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,387-ஆக உயா்ந்துள்ளது.