சென்னை கோயம்பேடு மொத்த வணிக வளாக அங்காடியில் உள்ள கடைகளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் அரசு முதன்மைச் செயலாளர் முனைவர். தா. கார்த்திகேயன், இ.ஆ.ப., சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் எஸ். ஜே. சிரு, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக சென்னை கோயம்பேடு சந்தை கடந்த மாா்ச் மாதம் இறுதியில் மூடப்பட்டது. பின்னர் கடந்த செப்.18-ஆம் தேதி முதல் கோயம்பேடு சந்தை படிப்படியாக பயன்பாட்டுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.