சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து: 6 பேர் பலி; 10 பேர் காயம்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலியாகினர். பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து: 6 பேர் பலி; 10 பேர் காயம்
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து: 6 பேர் பலி; 10 பேர் காயம்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலியாகினர். பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்தவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் இன்று மதியம் வெடி விபத்து ஏற்பட்டது. 

வெடி விபத்தில் அச்சங்குளம் ஏழாயிரம்பண்ணை, அன்பின் நகரம் பகுதிகளைச் சேர்ந்த 6 பேர் பலியாகினர். பத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சாத்தூர், வெம்பக்கோட்டை, சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏழாயிரம்பண்ணை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com