தமிழகத்தில் புதிதாக 483 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 483 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,44,173ஆக உயர்ந்துள்ளது.
கரோனா பாதிப்பில் இருந்து மேலும் 486 போ் குணமடைந்துள்ளனா். இதனால், மொத்த குணமடைந்தோா் எண்ணிக்கை 8,27,480 ஆனது. கரோனாவால் இன்று 6 போ் உயிரிழந்தனா். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு 12,408 ஆனது.
தற்போது 4,285 போ் மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.