சங்ககிரி அருள்மிகு சிவியார் மாரியம்மன் கோவிலின் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு

சேலம் மாவட்டம், சங்ககிரி நகர், பழைய எடப்பாடி சாலை பகுதியில் உள்ள அருள்மிகு சிவியார் மாரியம்மன் கோவிலில் அடையாளம் தெரியாத நபர்கள் வியாழக்கிழமை அதிகாலை பூட்டை உடைத்து கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த
சங்ககிரி நகர் பகுதியில் உள்ள பழைய எடப்பாடி சாலையில் உள்ள அருள்மிகு சிவியார் மாரியம்மன் கோவில்
சங்ககிரி நகர் பகுதியில் உள்ள பழைய எடப்பாடி சாலையில் உள்ள அருள்மிகு சிவியார் மாரியம்மன் கோவில்

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி நகர், பழைய எடப்பாடி சாலை பகுதியில் உள்ள அருள்மிகு சிவியார் மாரியம்மன் கோவிலில் அடையாளம் தெரியாத நபர்கள் வியாழக்கிழமை அதிகாலை பூட்டை உடைத்து கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை திருடிச் சென்று விட்டனர். இது குறித்து சங்ககிரி போலீசார் விசாரித்து வருகின்றனர். 

சங்ககிரி பழைய எடப்பாடி சாலை பகுதியில் பழமை வாய்ந்த அருள்மிகு சிவியார் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் பொங்கல் திருவிழா நடைபெற்று வருகின்றது. கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு பண்டிகை நடைபெற வில்லை. ஒவ்வொரு வருடமும் பண்டிகை முடிவுற்ற பின்னர் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை  கணக்கிட்டு வைப்பது வழக்கம் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக உண்டியலில் பக்தர்கள் நேர்த்தி கடனுக்காக  செலுத்திய ரொக்கம் உள்பட பல்வேறு பொருள்கள் வெளியே எடுக்காமல் உள்ளே இருந்து வந்ததாக கூறப்படுகிறது.  

கோவிலுக்கு அருகே ஒரு  பெண் உயிரிழந்ததை அடுத்து திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் ஆகம விதிகளுக்குள்பட்டு  கோவில் திறக்கப்படவில்லை என அர்ச்சகர் தெரிவித்தார். வழக்கம் போல்  காலையில் கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர் சுவாமியை வழிபட வந்த பக்தர்கள் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறக்கப்பட்டிருப்பது குறித்து கோவிலின் அர்ச்சகருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.  

அதனையடுத்து கோவில் நிர்வாகிகள் சென்று பார்த்துள்ளனர் அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் கோவிலின் பூட்டுகளை உடைத்து கோவிலின் உள்பகுதியில் நுழைந்து சுவாமி கருவறைக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த உண்டியலை திருடிச் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது.   

இது குறித்து கோவில் நிர்வாகிகள் சங்ககிரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.  இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.  

நகரின் மையப்பகுதியில் உள்ள கோவில் உண்டியல் திருடப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com