வேளாண் சட்டங்களை எதிர்த்து ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸார் தெருமுனை பிரசாரம் 

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் தெருமுனை பிரசாரம் மேற்கொண்டனர்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸார் தெருமுனை பிரசாரம்
வேளாண் சட்டங்களை எதிர்த்து ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸார் தெருமுனை பிரசாரம்

ஈரோடு: வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் தெருமுனை பிரசாரம் மேற்கொண்டனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் திருத்தச்சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும், பவானி ஆறு, காவிரி ஆறு மற்றும் வாய்க்கால்கள் மற்றும் நிலத்தடி நீரை மாசுபடுத்தும் சாயம் மற்றும் தோல் கழிவுகளைக் கலக்கும் ஆலைகளை நிரந்தரமாக மூட வேண்டும், மாணவர்களின் கல்விக் கடனை முழுவதும் ரத்து செய்ய வேண்டும் என அரசுகளுக்கு கோரிக்கை வைத்து இன்று ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் தெருமுனை பிரசாரம் நடந்தது. 

ஈரோடு மூலப்பாளையம் எல்.ஐ.சி. நகரில் நடந்த தெருமுனை பிரசாரத்திற்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம் பழனிச்சாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தெருமுனை பிரசாரத்தை தொடங்கி வைத்து பேசினார்.

வட்டார தலைவர்கள் கோபாலகிருஷ்ணன், முத்துக்குமார், ராவுத் குமார், சண்முகம், பொருளாளர் ரவி, இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் தளபதி ரமேஷ், எஸ்சி எஸ்டி பிரிவு தலைவர் சிவக்குமார், தில்லை சிவக்குமார் உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தெருமுனை பிரசாரம் நாளை வரை நடைபெற உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com