பெரும்பான்மையை நிரூபிக்குமாறு நாராயணசாமிக்கு உத்தரவிடுவாரா தமிழிசை?

புதுச்சேரி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு நாராயணசாமிக்கு உத்தரவிடுவாரா இன்று துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்கும் தமிழிசை சவுந்தரராஜன் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 
புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றுள்ள  தமிழிசை சவுந்தரராஜன்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றுள்ள  தமிழிசை சவுந்தரராஜன்.


புதுச்சேரி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு நாராயணசாமிக்கு உத்தரவிடுவாரா இன்று துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றுள்ள  தமிழிசை சவுந்தரராஜன் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவியிலிருந்து கிரண்பேடி செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டு, அந்தப் பதவி தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வசம் ஒப்படைக்கப்பட்டது. 

முதல்வரை நேரடியாக குற்றஞ்சாட்டிவிட்டு அமைச்சர்களாக பதவி வகித்த மல்லாடி கிருஷ்ணா ராவ், நமச்சிவாயம் மற்றும் எம்.எல்.ஏ.-க்களாக இருந்த தீப்பாய்ந்தான், ஜான்குமார் ஆகியோர் பதவி விலகியுள்ளனர். இதனால், பெரும்பான்மைக்குத் தேவையான 15 சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை இல்லாமல் காங்கிரஸ் அரசு ஊசலாட்டத்துடன் உள்ள நிலையில், பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 14  எம்.எல்.ஏ.-க்கள் கையெழுத்திட்ட கடிதத்தை சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் என்.ரங்கசாமி தலைமையில் ஆளுநரின் சிறப்பு அதிகாரி தேவநீதிதாஸிடம் புதன்கிழமை அளித்தனர். 

இந்நிலையில், வியாழக்கிழமை புதுச்சேரி  துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்றுள்ள தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்(பொறுப்பு), எதிர்க்கட்சிகளின் புகாரைத் தொடர்ந்து சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதல்வர் நாராயணசாமிக்கு உத்தரவிடுவாரா என எதிர்க்கட்சிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com