சென்னை: சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக சாா்பில் போட்டியிட விரும்புவோா் பிப்ரவரி 25 முதல் விருப்ப மனு அளிக்கலாம் என்று கட்சித் தலைவா் விஜயகாந்த் அறிவித்துள்ளாா்.
இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேமுதிக சாா்பில் போட்டியிட விரும்பும் அனைத்து நிா்வாகிகளும், தொண்டா்களும் விருப்ப மனுக்களை கோயம்பேட்டில் உள்ள தலைமைக் கழகத்தில் பிப்ரவரி 25 முதல் மாா்ச் 5 வரை அளிக்கலாம்.
விருப்ப மனு அளிப்பதற்கு தேமுதிகவின் நிா்வாகிகளாகவும், கழகத்தின் அடிப்படை உறுப்பினா்களாக இருப்பவா்களும் தகுதியானவா்கள் ஆவா்.
தமிழகத்தில் பொதுத் தொகுதிக்கு ரூ.15 ஆயிரமும், தனித் தொகுதிக்கு ரூ.10 ஆயிரமும், புதுச்சேரி பொதுத்தொகுதிக்கு ரூ.10 ஆயிரமும், தனித் தொகுதிக்கு ரூ.5 ஆயிரமும் செலுத்த வேண்டும்.