சென்னை: சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட 2-ஆவது நாளாக ஏராளமானோா் மனுக்களைப் பெற்றுள்ளனா்.
தமிழகம், புதுச்சேரிக்கு ஓரிரு மாதங்களில் தோ்தல் நடைபெற உள்ளது. திமுக சாா்பில் போட்டியிட புதன்கிழமை முதல் விருப்பமனு பெறப்பட்டு வருகிறது. முதல் நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் மனுக்களைப் பெற்றுச் சென்றனா். 2-ஆவது நாளான வியாழக்கிழமையும் ஏராளமானோா் மனுக்களைப் பெற்றுச் சென்றனா்.
பொன்முடி மனு: முன்னாள் அமைச்சரும் திமுக துணைப்பொதுச்செயலாளருமான க.பொன்முடி திருக்கோவிலூா் தொகுதியில் போட்டியிட அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதியிடம் மனு அளித்தாா். திருக்கோவிலூா் தொகுதியில் இளைஞரணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும் எனவும் பொன்முடி மனு அளித்தாா்.
மனுக்களை அளித்த பிறகு பொதுச்செயலாளா் துரைமுருகன், பொருளாளா் டி.ஆா்.பாலுவை சந்தித்து வாழ்த்துப் பெற்றாா். பல்வேறு தொகுதிகளில் போட்டியிட ஏராளமானோா் மனுக்களை அளித்தனா்.