ரூ.100-ஐ நெருங்குகிறது பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு முறையே 27, 32 காசுகள் அதிகரித்துள்ளது.  
ரூ.100-ஐ நெருங்குகிறது பெட்ரோல், டீசல் விலை


சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு முறையே 27, 32 காசுகள் அதிகரித்துள்ளது.  தொடர்ந்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை அதிகரித்து வரலாறு காணாத உச்சத்தை எட்டி வருகிறது. 

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் 17 முதல் சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் மாற்றியமைத்து விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் விநியோக நிறுவனங்கள் நாள்தோறும் எரிபொருள்களின் விலையை நிர்ணயிக்கின்றன. அதன்படி, காலை 6 மணி முதல் புதிய விற்பனை விலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 27 காசுகளும், டீசல் நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 32 காசுகள் அதிகரித்துள்ளது. இதையடுத்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.92.25 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் டீசல் ரூ.85.63 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவது வாகன ஓட்டிகள், வணிகர்கள், மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் அத்தியாவசிய பொருள்களின் விலையும் மறைமுகமாக உயர்ந்து வருவதாக கவலை தெரிவித்துள்ளனர். 

பெட்ரோல், டீசல் உற்பத்தி விலை அதற்கு விதிக்கப்படும் விலையில் மூன்றில் ஒரு பங்குதான் என்றும், மீதம் இருப்பது மத்திய , மாநில அரசுகளின்  வரிகளே என்று கூறப்படுகிறது.  இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரிகளை குறைக்க முன் வரவேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com