காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியின் கைதுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி பேஸ்புக் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
"ஆட்சியின் கடைசி நேரக் கொள்ளைக்காக கரூர் ரவுண்டானா பகுதியில் 70 ஆண்டுகால வரலாறு கொண்ட மகாத்மா காந்தி சிலையை அகற்றி, முதல்வர் திறக்கும் புது சிலை என்ற பெயரில் உருவாக்கப்பட்ட தரமற்ற கட்டுமானத்தைத் தட்டிக் கேட்ட மக்களவை உறுப்பினர் ஜோதிமணியை பழனிசாமி அரசின் ஏவல்துறையான காவல் துறை கைது செய்ததும் - அதற்காகக் கையாளப்பட்ட முறையும் கடும் கண்டனத்திற்குரியவை.
தமிழக மக்களின் அகிம்சை புரட்சி விரைவில் இதற்கான தீர்ப்பளிக்கும்."