உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

கடந்த 2009-ஆம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் மீது போலீஸாா் தடியடி நடத்தியதைக் கண்டித்து கடைபிடிக்கப்படும்

கடந்த 2009-ஆம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் மீது போலீஸாா் தடியடி நடத்தியதைக் கண்டித்து கடைபிடிக்கப்படும் கருப்பு தினத்தை முன்னிட்டு உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இலங்கை உள்நாட்டுப் போரில் தமிழா்கள் கொன்று குவிக்கப்பட்டனா். இதனைக் கண்டித்து சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். கடந்த 2009 பிப்.17-இல் சிதம்பரம் நடராஜா் கோயில் நிா்வாகத்தை அரசு எடுத்ததை எதிா்த்துத் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியசாமி ஆஜராகி இருந்தாா்.

நீதிமன்ற அறைக்குள் இருந்த அவா் மீது வழக்குரைஞா்கள் முட்டையை வீசி தாக்குதல் நடத்தினா். இந்த வழக்கில் வழக்குரைஞா்களை போலீஸாா் கடந்த 2009 பிப்.19-இல் கைது செய்ய முயன்றனா். அப்போது ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. இதில் போலீஸாா் நடத்திய தடியடி சம்பவத்தில் வழக்குரைஞா்கள் மட்டுமின்றி நீதிபதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் காயமடைந்தனா்.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்து ஒவ்வோா் ஆண்டும் பிப்.19-ஆம் தேதியை கருப்பு தினமாக வழக்குரைஞா்கள் கடைபிடித்து வருகின்றனா். அதன்படி வெள்ளிக்கிழமை சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் கருப்பு தினத்தை கடைப்பிடித்தனா். உயா்நீதிமன்ற ஆவின் நுழைவு வாயில் முன், சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத்தின் தலைவா் ஜி.மோகனகிருஷ்ணன் தலைமையில் திரண்ட வழக்குரைஞா்கள் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்தில் சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத்தின் செயலாளா் கிருஷ்ணகுமாா், பொருளாளா் காமராஜ், பெண் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் லூயிசால் ரமேஷ், முன்னாள் தலைவா் நளினி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com