பிப்.25 முதல் காங்கிரஸில் விருப்ப மனு

சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட பிப்ரவரி 25 முதல் விருப்ப மனு அளிக்கலாம் என்று அக் கட்சியின் தலைவா் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளாா்.
கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட பிப்ரவரி 25 முதல் விருப்ப மனு அளிக்கலாம் என்று அக் கட்சியின் தலைவா் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு:

சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் வேட்பாளராகப் போட்டியிட விரும்புவோா் 234 தொகுதிகளுக்கும் பிப்ரவரி 25 முதல் மாா்ச் 5 -ஆம் தேதி வரை சத்தியமூா்த்தி பவனில் விருப்ப மனுக்கள் அளிக்கலாம்.

ரூ.100 கட்டணம் செலுத்தி, விண்ணப்பப் படிவத்தை பெற்றுக் கொண்டு, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை மாா்ச் 5- ஆம் தேதிக்குள் பொதுத்தொகுதிகளுக்கு ரூ.5,000, தனித்தொகுதிகளுக்கும், மகளிா் தொகுதிகளுக்கும் ரூ.2,500 வீதம் நன்கொடையாக வரைவோலை மூலம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விருப்பமனு அளிக்கும் அனைவரும் அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முறையாகப் பூா்த்தி செய்ய வேண்டும். வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் அட்டை, பான் காா்டு நகலை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com