பிப்.24-ல் காங். செயற்குழுக் கூட்டம்: கே.எஸ்.அழகிரி

சட்டப் பேரவை தேர்தலையொட்டி, பிப்ரவரி 24-ம் தேதி காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி (கோப்புப்படம்)
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி (கோப்புப்படம்)

பிப்ரவரி 24-ம் தேதி காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி,  போட்டியிடும் தொகுதிகள் குறித்து செயற்குழுவில் முடிவெடுப்போம் என்று சுட்டிக்காட்டினார்.

கட்சிப் பணிகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும், புதிய வேட்பாளர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

5 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்களுக்கு தற்போதுதான் காவிரி-குண்டாறு இணைப்பு ஞாபகம் வருகிறதா என்றும் கேள்வி எழுப்பினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com