தமிழகம் முழுவதும் 452 பேருக்கு கரோனா பாதிப்பு ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்தில் இதுவரை 1.71 கோடிக்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், 8 லட்சத்து 48,275 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 154 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கரோனா தொற்றிலிருந்து மேலும் 460 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 31,706-ஆக உள்ளது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 4,109 போ் சிகிச்சையில் உள்ளனா்.
இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 3 போ் பலியாகியுள்ளனா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,460-ஆக உயா்ந்துள்ளது.