கடலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர் சங்கத்தினர் 40 பேர் கைது செய்யப்பட்டனர்.
சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் அனைவரையும் முழு நேர அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கடலூரில் இன்று மாவட்ட ஆட்சியர் பழைய அலுவலகம் அருகே சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒன்றிய செயலாளர் எஸ்.கற்பகம் உள்பட 40 பேர் கைது செய்யப்பட்டனர்.