பேரவையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள ஆலமர இயற்கை விநாயகர் கோயிலில் ஓ. பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்தார்.
தமிழக சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
முன்னதாக, சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள ஆலமர இயற்கை விநாயகர் கோயிலுக்கு வந்த துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அங்கு சுவாமி தரிசனம் செய்தார்.