திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அடுத்த திருவிடைவாசல் பெட்ரோல் நிலையத்தை மாவட்ட எஸ்.பி., திறந்து வைத்தார்.
துபாய், குவைத், புருனே உள்ளிட்ட நாடுகளின் தொழிலதிபர் ஆ.எஸ்.அப்துல் ஹமீது ஆலோசனையின்படி, அவரது மகன் நூருல் அமீன் ஏற்பாட்டில், திருவிடைவாசல் பிரதான சாலையில், பெட்ரோல் பங்க் திறக்கப்பட்டது.
இவ்விழாவிற்கு, மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.எம்.பி. துரைவேலன் தலைமை வகித்தார். பொதக்குடி, அத்திக்கடை ஜமாஅத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். பெட்ரோல் பங்க் உரிமையாளர் நூருல் அமீன் வரவேற்றார். பெட்ரோல் பங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எம்.துரை திறந்து வைத்து முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தார்.
விழாவில், பொதக்குடி ஊர் உறவின் முறை ஜமாஅத் நிர்வாக சபை அறப்பணிச் சங்க செயலாளர் எம்.எம்.ரஃப்யூதீன், மதர் இந்தியா மேல் நிலைப்பள்ளி தாளாளரும், ஆர்.எஸ்.ஹமீது நண்பருமான வி.ஆர்.என்.பன்னீர் செல்வம், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் தினேஷ் குமார், மன்ப உல் உலா மேல்நிலைப் பள்ளி தாளாளர் திமிஜ்ஜீதீன், ஆங்கில ஆசிரியர் அப்துல் வஹாப் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நிறைவாக, ஆர்.எஸ். அப்துல் ஹமீது மருமகன் அகமது பதார் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை, மேலாளர் ஏ.டபுள்யூ. முகமது கசாவி, சுரேஷ் மற்றும் நண்பர்கள் கவனித்தனர்.