கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 57% பேருந்துகள் இயக்கம்

தமிழக அரசு 14 வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொமுச, சிஐடியூ உள்ளிட்ட 11 தொழிற்சங்கங்கள் தொடர் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 57% பேருந்துகள் இயக்கம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 57% பேருந்துகள் இயக்கம்


கிருஷ்ணகிரி: தமிழக அரசு 14 வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொமுச, சிஐடியூ உள்ளிட்ட 11 தொழிற்சங்கங்கள் தொடர் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தன.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும்பாலான  ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர். அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி ஓசூர் ஊத்தங்கரை தேன்கனிக்கோட்டை ஆகிய பணிமனையில் இருந்து மொத்தம் இல்ல 429 பேருந்துகளில் 225 க்கும் மேற்பட்ட பேருந்துகள் அதாவது 57 சதவீத பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு போக்குவரத்து கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிருஷ்ணகிரி ஓசூர் ஊத்தங்கரை தேன்கனிக்கோட்டை ஆகிய பணிமனையில்  57 சதவீத பேருந்துகள் இயக்கம்.

காலையில் குறைந்த அளவு பேருந்துகள் இயக்கப்படும். தற்போது படிப்படியாக பேருந்துகள் இயக்கம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com