மாவோயிஸ்டுகள் தாக்குதலில் தமிழக வீரர் பாலுசாமி வீர மரணம்: ஸ்டாலின் இரங்கல்

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் வீர மரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த பாலுசாமி குடும்பத்தினருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் வீர மரணமடைந்த தமிழக வீரர் பாலுசாமி.
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் வீர மரணமடைந்த தமிழக வீரர் பாலுசாமி.

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் வீர மரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த பாலுசாமி குடும்பத்தினருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நமது ராணுவத்தின் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையில் சேவையாற்றி, சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் வீர மரணம் எய்திய தமிழக வீரர் மதுரை அழகர்கோவில் பாலுசாமி அவர்களுக்கு வீரவணக்கம்.

அவரது குடும்பத்தினர் - கிராமத்தினரின் துயரத்தில் பங்கேற்று ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com