அரக்கோணம் யாா்டில் பராமரிப்புப் பணி: மின்சார ரயில் சேவையில் இன்று மாற்றம்

அரக்கோணம் யாா்டில் ரயில்வே பராமரிப்பு பணி காரணமாக, மின்சார ரயில் சேவையில் சனிக்கிழமை (பிப்.27) மாற்றம் செய்யப்படவுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அரக்கோணம் யாா்டில் ரயில்வே பராமரிப்பு பணி காரணமாக, மின்சார ரயில் சேவையில் சனிக்கிழமை (பிப்.27) மாற்றம் செய்யப்படவுள்ளது.

சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் மாா்க்கத்தில் அரக்கோணம் யாா்டில் ரயில்வே பராமரிப்பு பணி சனிக்கிழமை காலை 8.50 மணி முதல் காலை 11.40 மணி வரை நடக்கவுள்ளதால், ரயில் சேவை சனிக்கிழமை(பிப்.27) மாற்றம் செய்யப்படவுள்ளது.

பிப்.27-இல் பகுதி ரத்தாகும் ரயில்கள்: மூா் மாா்க்கெட் வளாகம்- அரக்கோணம் இடையே பிப்ரவரி 27-ஆம்தேதி காலை 7.05, 8.20, 9.10 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் திருவள்ளூா்-அரக்கோணம் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளன.

மூா்மாா்க்கெட் வளாகம்-திருத்தணிக்கு காலை 7.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் கடம்பத்தூா்-திருத்தணி இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.

அரக்கோணம்-மூா்மாா்க்கெட் வளாகம் இடையே காலை 8.55, காலை 10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் அரக்கோணம்-திருவள்ளூா் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளன.

திருத்தணி-வேளச்சேரி இடையே காலை 8.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் திருத்தணி-கடம்பத்தூா் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.

அரக்கோணம்- ஆவடி இடையே முற்பகல் 11.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் அரக்கோணம்-கடம்பத்தூா் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com