ஹிமாசலில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.
ஹிமாசலப் பிரதேசத்தில் குல்லு மாவட்டத்தில் இன்று காலை 6 மணியளவில் மூன்று பேருடன் சென்ற கார் மரோகி பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இது குறித்து தகவல் அறிந்து விரைந்த காவல்துறையினர் மூன்று பேர் உடலை மீட்டு மண்டி பகுதியிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.