உத்தமபாளையம், சின்னமனூரில் புத்தாண்டு கொண்டாட்டம்

தேனி மாவட்டம் உத்தமபாளையம், சின்னமனூரில் வெள்ளிக்கிழமை ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு பிரார்த்தனை நடைபெற்றது.
உத்தமபாளையத்தில்   சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள்.  
உத்தமபாளையத்தில்   சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள்.  

தேனி மாவட்டம் உத்தமபாளையம், சின்னமனூரில் வெள்ளிக்கிழமை ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு பிரார்த்தனை நடைபெற்றது.

உத்தமபாளையத்தில் அருள்மிகு திருக்காளாத்தீஸ்வரர்- ஞானாம்பிகை திருக்கோயிலில் காலை முதல் பக்தர்கள் வருகை அதிகளவில் காணப்பட்டது. நெய் விளக்கு, பூ மாலை படைத்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

அதே போல, சி.எஸ்.ஐ. , ஆர்.சி உள்ளிட்ட திருச்சபையில் வியாழக்கிழமை இரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. வெள்ளிக்கிழமையிலும் நடைபெற்ற சிறப்புப் பிரார்த்தனையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். தவிர, ராயப்பன்பட்டி புனித பனிமய மதா பேராலயம் மற்று அனுமந்தன்பட்டி தூய ஆவியார் பேராலயத்திலும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

சின்னமனூரில் பூலாநந்தீஸ்வரர் - சிவகாமியம்மன் உடனுறை கோயிலில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றதில் சின்னமனூர், மார்க்கையன்கோட்டை சுற்றி வட்டாரத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அங்குள்ள சி.எஸ்.ஐ திருச்சபையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com