திருப்பூரில் உள்ள கோவில்களில் ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர். இதில் திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவிலில் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு, திருப்பூரில் உள்ள கோவில்களில் வெள்ளிக்கிழமை காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திருப்பூர் விஸ்வேஸ்வரசாமி கோவில், வீரராகவப்பெருமாள் கோவில், திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நடந்த சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
இதில் திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவிலில் மாரியம்மனுக்கு புத்தாண்டை முன்னிட்டு ரூபாய் நோட்டு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.