எழுத்தாளரும் திரைப்பட இயக்குநருமான கவிஞர் இளவேனில் (70), சென்னையில் மாரடைப்பால் சனிக்கிழமை இரவு காலமானார்.
முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் கதை வசனத்தில் உருவான உளியின் ஓசை திரைப்படத்தை இயக்கியவர் கவிஞர் இளவேனில்.
இடதுசாரி சிந்தனையாளரான கவிஞர் இளவேனில், திராவிட இயக்கப் பற்றாளராகவும் பெரிதும் அறியப்பட்டவர்.