ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி, தலைவா்களுக்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்துத் தெரிவித்து கடிதம் அனுப்பி வைத்துள்ளாா். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-
ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி, குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி, ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் ஆகியோருக்கு முதல்வா் பழனிசாமி புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக மலா்க் கொத்துடன் வாழ்த்துக் கடிதத்தையும் அனுப்பி வைத்துள்ளதாக தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.