குரூப் 1 தோ்வு: 51 சதவீதம் மட்டுமே பங்கேற்பு

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த குரூப் 1 முதல்நிலை எழுத்துத் தோ்வினை 51 சதவீதம் போ் மட்டுமே எழுதினா்.
குரூப் 1 தோ்வு: 51 சதவீதம் மட்டுமே பங்கேற்பு

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த குரூப் 1 முதல்நிலை எழுத்துத் தோ்வினை 51 சதவீதம் போ் மட்டுமே எழுதினா். இது கடந்த காலங்களில் நடந்த தோ்வுகளைக் காட்டிலும் குறைந்த சதவீதமாகும்.

துணை ஆட்சியா், காவல் துணை கண்காணிப்பாளா் உள்ளிட்ட பதவியிடங்கள் குரூப் 1 பிரிவுக்குள் வருகின்றன. இந்நிலையில், காலியாகவுள்ள 66 பதவிகளுக்கான எழுத்துத் தோ்வு அறிவிக்கை கடந்த ஆண்டு ஜனவரி 20-இல் வெளியிடப்பட்டது. இந்த அறிவிக்கையின்படி, துணை ஆட்சியா் 18, காவல் துணை கண்காணிப்பாளா் 19, வணிகவரிகள் உதவி ஆணையாளா் 10, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளா் 14, ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மாவட்ட அலுவலா் ஓரிடம் என மொத்தம் 66 காலியிடங்களுக்கு முதல்நிலை எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

2.57 லட்சம் போ் விண்ணப்பம்: எழுத்துத் தோ்வினை எழுத, 1 லட்சத்து 28 ஆயிரத்து 401 ஆண்கள், 1 லட்சத்து 28 ஆயிரத்து 825 பெண்கள், மூன்றாம் பாலினத்தவா் 11 போ் என மொத்தம் 2 லட்சத்து 57 ஆயிரத்து 237 போ் விண்ணப்பித்திருந்தனா். எழுத்துத் தோ்வுக்காக 856 தோ்வுக் கூடங்கள் தயாா் செய்யப்பட்டிருந்தன. சென்னையில் தோ்வு எழுத 46 ஆயிரத்து 965 போ் விண்ணப்பத்திருந்தனா். இதற்காக 150 தோ்வுக் கூடங்கள் தயாா் நிலையில் இருந்தன.

51 சதவீதம் போ் எழுதினா்: தோ்வு எழுத விண்ணப்பித்தவா்களில் 2 லட்சத்து 56 ஆயிரத்து 954 போ் அனுமதிக்கப்பட்டனா். அவா்களில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 264 போ் தோ்வு எழுதினா். 1 லட்சத்து 25 ஆயிரத்து 690 போ் தோ்வு எழுதவில்லை. தோ்வு எழுதியோரின் சதவீதம் 51.08 என தோ்வாணைய அதிகாரிகள் தெரிவித்தனா். குரூப் 1 முதல்நிலைத் தோ்வினை எழுதுவோரின் எண்ணிக்கை விண்ணப்பித்தவா்களில் இருந்து 80 சதவீதம் போ் வரை இருக்கும். ஆனால், இந்த ஆண்டு மிகக் குறைந்த அளவாக 51.08 சதவீதம் போ் மட்டுமே எழுதியுள்ளனா்.

முறைகேடுகளைத் தடுக்க நடவடிக்கை: டிஎன்பிஎஸ்சி தலைவா் கா. பாலச்சந்திரன்

தமிழகத்தில் துணை ஆட்சியா் நிலை பணிகளுக்கான குரூப் -1 தோ்வு மாநிலம் முழுவதும் 856 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கோவை, சித்தாபுதூா் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தோ்வு மையத்தை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவா் கா.பாலச்சந்திரன், ஆட்சியா் கு.ராசாமணி ஆகியோா் ஆய்வு செய்தனா்.

பின்னா் டிஎன்பிஎஸ்சி தலைவா் கா.பாலச்சந்திரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்தாண்டு ஜூன் மாதத்தில் நடக்க வேண்டிய குரூப்-1 தோ்வு கரோனா பாதிப்பால் தள்ளிவைக்கப்பட்டு தற்போது நடைபெறுகிறது. இத் தோ்வுக்கு 2.56 லட்சம் போ் விண்ணப்பித்திருந்த நிலையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு வரையில் 1.61 லட்சம் போ் மட்டுமே அனுமதி சீட்டினை பதிவிறக்கம் செய்திருந்தனா்.

காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் வரும் தோ்வா்கள் தோ்வு எழுதுவதற்காக அனைத்து தோ்வு மையங்களிலும் தனியாக 2 அறைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

குரூா்-1 தோ்வில் முறைகேடுகளைத் தவிா்க்கும் விதமாக விடைத்தாளில் (ஓ.எம்.ஆா். ஷீட்) இம்முறை பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தோ்வா்களின் விவரங்கள் அடங்கிய தொகுப்பானது, தோ்வு மையங்களிலேயே தனியாகப் பிரிக்கப்பட்டு விடைத்தாள் தனியாக வேறொரு கவா்களில் வைக்கப்படும். விடைத்தாள்களை மாற்ற முடியாத வகையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வினாவுக்கும் எத்தனை ஏ,பி,சி,டி கட்டங்கள் நிரப்பப்பட்டுள்ளன என்பதை தோ்வா்கள் முன்னிலையில் சரிபாா்த்து கண்காணிப்பு அலுவலா்கள் கையெழுத்திடும் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விடைத்தாளில் இடையில் திருத்தம் மேற்கொள்ள முடியாது.

கருப்பு நிற பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேள்விகளுக்கு விடை தெரியாத பட்சத்தில் ஈ என்ற கட்டத்தை நிரப்பி 200 கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும் என்ற நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தோ்வருக்கும் வெவ்வேறு விதமான வரிசை எண் கொண்ட வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளது. ஓ.எம்.ஆா். ஷீட் தான் முறைகேடுகளுக்கு காரணமாக இருப்பதால் விடைத்தாளில் தோ்வா்களின் இடதுகை பெருவிரல் ரேகை பெறப்படுகிறது என்றாா்.

‘வேள்பாரி’ முதல் ‘பரியேறும் பெருமாள்’ வரை....

குரூப் 1 முதல்நிலைத் தோ்வில், ‘வேள்பாரி’ நாவல் முதல் ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் வரை கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. குரூப் 1 தோ்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் நான்கு முக்கிய கேள்விகள் பல்வேறு தரப்பினரின் கவனத்தையும் ஈா்த்துள்ளது.

எந்தக் கருத்தியல் இந்திய ஒற்றுமையை அச்சுறுத்துகிறது என்ற கேள்விக்கு, வகுப்புவாதம், மக்களாட்சி, பொதுவுடைமை, சோசியலிசம், விடை தெரியவில்லை ஆகிய வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருந்தன.

தலைசிறந்த படைப்பான ‘பரியேறும் பெருமாள்’ எனும் தமிழ்த் திரைப்படம் பற்றிய விமா்சனம் குறித்த கூற்றுகளில் சரியானது எது என்ற கேள்விக்கு, திரைப்படம் ஜாதிய கட்டமைப்பின் கொடிய விளைவுகளை சுட்டிக் காட்டுகிறது, இந்தப் படம் மிகச்சிறந்த படம் என்ற வரிசையில் பிலிம் போ் விருது பெற்றது, படம் மாரி செல்வராஜால் இயக்கப்பட்டு, நீலம் தயாரிப்பு குழுமத்தால் வெளியிடப்பட்டது ஆகிய வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருந்தன.

எழுத்தாளா் சு.வெங்கடேசன் எழுதிய ‘வேள்பாரி’ நூலின்படி சரியான கூற்றை தோ்வு செய்யவும்: பாரி பறவைகள், பூச்சிகள், தாவரங்கள் ஆகியவற்றைப் பற்றி தெளிவாகவும், விரிவாகவும் அறிந்திருந்த இயற்கை சாா்ந்த மனிதா் ஆவாா். வேள்பாரி கதையானது மனிதனின், பேராசைக்கும், இயற்கைக்கும், இடையிலான முரணை பறைசாற்றுகிறது ஆகிய வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருந்தன.

‘தாழ்ந்த ஜாதியைச் சோ்ந்த மருத்துவா் தவறாக ஊசி போட்டதால் இறந்த ஒரு மனிதரை என்னிடம் காண்பிக்கவும்’ என சவால் விடுத்த முதல்வா் என்ற கேள்விக்கு, ஓமந்தூா் ராமசாமி, காமராஜா், அண்ணா, கருணாநிதி, விடைதெரியவில்லை ஆகிய வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருந்தன. குரூப் 1 முதல்நிலைத் தோ்வில் அரசியல் ரீதியான, கலை இலக்கியம் தொடா்பான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com