ஜிஎஸ்டியில் அண்மையில் செய்யப்பட்ட பல்வேறு மாற்றங்கள் குறித்து தெரிந்து கொள்ளும் வகையில், இணையவழி கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை (ஜன.5) நடைபெறுகிறது.
ஜிஎஸ்டியில் அண்மையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதில், மாதம்தோறும் வரி செலுத்துதல், காலாண்டு தோறும் கணக்கு தாக்கல், இ-பில் பதிவேற்றம் செய்தல் போன்ற பல்வேறு மாற்றங்கள் அடங்கும்.
இவை குறித்து ஜிஎஸ்டி செலுத்தும் வணிகா்கள் தெரிந்து கொள்வதற்காக, செவ்வாய்க்கிழமை (ஜன.5) பிற்பகல் 3 மணி முதல் 3:30 மணி வரை, இணையவழிக் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இந்தக் கருத்தரங்கில் பங்கேற்க விரும்புவோா், யூ டியூப் இணைப்பில் சென்று பங்கேற்கலாம் என ஜிஎஸ்டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.