தமிழகம், புதுவை தேர்தல்: காங்கிரஸ் பிரசார மேற்பார்வையாளர்களாக மூவர் நியமனம்

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசார மேற்பார்வையாளர்களாக மூத்த தலைவர்கள் எம். வீரப்ப மொய்லி, எம்.எம். பல்லம் ராஜு மற்றும் நிதின் ரௌத் ஆகியோரை காங்கிரஸ் நியமித்துள்ளது.
வீரப்ப மொய்லி (கோப்புப்படம்)
வீரப்ப மொய்லி (கோப்புப்படம்)


தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசார மேற்பார்வையாளர்களாக மூத்த தலைவர்கள் எம். வீரப்ப மொய்லி, எம்.எம். பல்லம் ராஜு மற்றும் நிதின் ரௌத் ஆகியோரை காங்கிரஸ் நியமித்துள்ளது.

இதேபோல் 2021-இல் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள அசாம், கேரளம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் தேர்தல் பிரசார மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

அசாம்: பூபேஷ் பாகெல், முகுல் வாஸ்னிக் மற்றும் ஷகீல் அகமது கான்

கேரளம்: அசோக் கெலாட், லூய்ஸின்ஹோ ஃபலெய்ரோ மற்றும் ஜி. பரமேஸ்வரா

மேற்கு வங்கம்: பி.கே. ஹரிபிரசாத், ஆலம்கிர் ஆலம் மற்றும் விஜய் இந்தர் சிங்ளா

இதுதொடர்பான செய்திக் குறிப்பை காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com