விழுப்புரம் மாவட்டத்தில் மீண்டும் புதன்கிழமை காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
விழுப்புரத்தில் காலை 9 மணிக்கு தொடங்கிய மழை தொடர்ச்சியாக ஒரு மணி நேரம் பெய்தது. சிறு இடைவெளியுடன் மீண்டும் பலத்த மழை தொடங்கி பெய்து வருகிறது.
இதேபோல் கண்டமங்கலம், திண்டிவனம், முகையூர், உளுந்தூர்பேட்டை, வளவனூர் பகுதிகளிலும் பலத்த மழையாக பெய்து வருகிறது.
இதனால் நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்துகளின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
தொடர் மழையால் நீர்நிலை, வாய்க்கால்களில் மழைநீர் வழிந்தோடியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திடீர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.