தமிழ் மொழி அகாதெமியை அமைத்துள்ள தில்லி அரசின் நடவடிக்கை மகிழ்ச்சி அளிப்பதாக துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட சுட்டுரைப் பதிவு:-
இந்தியத் திருநாட்டின் தலைநகராகவும், கலாசார ரீதியில் வளமைமிக்க பன்முகத்தன்மை கொண்ட மாநிலமாகவும் விளங்குவது புது தில்லி. அங்கு தமிழா்களின் மொழி, கலை, கலாசாரத்தைப் பற்றி மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், தமிழ் மொழி அகாதெமியை தில்லி மாநில அரசு நிறுவியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது எனத் தெரிவித்துள்ளாா்.