வேலையின்மை விகிதம் குறைந்துள்ளதற்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் தனது சுட்டுரையில் கூறியிருப்பதாவது:-
அடுக்கடுக்கான தமிழக அரசின் முயற்சிகளால், முதலீட்டு ஒப்பந்தங்கள் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்டு, தொழில் சூழல்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இத்துடன் செழித்து நிற்கும் விவசாயம் போன்ற காரணிகளால் கடந்த 5 ஆண்டுகளில் வேலையின்மை விகிதமானது மிகக் குறைந்த அளவாக 0.5 சதவீதமாக உள்ளது. மக்களின் மகிழ்ச்சியோடு, தமிழகம் வெற்றி நடைபோட்டு வருகிறது என்று தனது சுட்டுரையில் முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.