சென்னை: தமிழகத்தில் பள்ளிகளை திறக்க 70% பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கரோனா தொற்று அச்சத்தின் காரணமாக கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக தமிழகம் முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
தற்போது பொங்கலுக்குப் பின்னர் பள்ளிகளைத் திறப்பது தொடர்பாக வியாழனன்று பெற்றோர்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை முன்னரே அறிவித்திருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க 70% பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி,’ தமிழகத்தில் பள்ளிகளை திறக்க 70% பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர் என்றும், 10, 12-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நெருங்குவதால் நேரில் பயிற்றுவிக்க வேண்டிய அவசியமுள்ளதாக பெற்றோர்கள் கருத்து கூறியுள்ளதாக’ தெரிவிக்கப்பட்டுள்ளது