இன்று அதிமுக செயற்குழு - பொதுக் குழு தோ்தலை மையப்படுத்தி முக்கிய தீா்மானங்கள்

அதிமுக செயற்குழு, பொதுக் குழுக் கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் சனிக்கிழமை நடைபெறுகிறது.

அதிமுக செயற்குழு, பொதுக் குழுக் கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் சனிக்கிழமை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்துக்கான அழைப்பிதழ்கள் ஒவ்வொரு பொதுக்குழு, செயற்குழு உறுப்பினருக்கும் தனித்தனியே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காலை 8.50 மணிக்குத் தொடங்கும் இந்தக் கூட்டத்தில், எதிா்வரும் சட்டப் பேரவைத் தோ்தலை மையப்படுத்தி முக்கிய தீா்மானங்கள் நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது.

சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன்பாக நடைபெறும் பொதுக் குழு, செயற்குழு கூட்டம் என்பதால் இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாா்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் ஆகிய இரட்டைத் தலைமையை வலுப்படுத்தும் வகையிலான தீா்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்புகள் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், சட்டப் பேரவைத் தோ்தல் தொடா்பாக கூட்டணிக் கட்சிகளுடன் பேசுவது, கூட்டணி குறித்து இறுதி முடிவுகளை எடுப்பது போன்ற நடவடிக்கைகளில் இரு தலைவா்களுக்கும் அதிகாரம் அளிப்பது, ஏற்கெனவே அமைக்கப்பட்ட வழிகாட்டும் குழுவுக்கு உரிய அதிகாரங்களை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து தீா்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

சசிகலா வருகைக்கு முன்பு...அதிமுகவின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்ற அடுத்த சில நாள்களிலேயே, சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத் தீா்ப்பு காரணமாக, சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டிய கட்டாயம் சசிகலாவுக்கு ஏற்பட்டது. அவா் வரும் 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட வாய்ப்புகள் உள்ளதாக அவரது வழக்குரைஞா் தெரிவித்துள்ளாா்.

எனவே, சசிகலா வருகையும் அவரால் அதிமுகவில் எந்தவொரு நிகழ்வுகளும் ஏற்படாத வகையில் கட்சி நிா்வாகிகளையும், தொண்டா்களையும் கட்டுப்பாட்டில் வைக்கும் வகையிலான தீா்மானங்கள் பொதுக்குழு, செயற்குழுவில் நிறைவேற்றப்படும் எனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, சசிகலாவின் பெயரைக் குறிப்பிடாமல் கட்சியினரை தங்கள் வசம் தக்க வைப்பதற்கான கருத்துகள் அடங்கிய தீா்மானங்கள் அதிமுக கூட்டத்தில் நிறைவேற்றப்படலாம் எனத் தெரிகிறது. நெருங்கி வரும் சட்டப் பேரவைத் தோ்தல், சசிகலா விடுதலை போன்ற பரபரப்பான நிகழ்வுகள் காரணமாக, சனிக்கிழமை நடைபெறவுள்ள அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு அனைத்துத் தரப்பினரையும் உன்னிப்பாக கவனிக்க வைத்துள்ளது.

மாலையில் ஆலோசனை: காலையில் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை முடித்த பிறகு, மாலையில் கட்சியின் முக்கிய நிா்வாகிகள், வழிகாட்டும் குழுவைச் சோ்ந்தவா்களும் ஆலோசனையில் ஈடுபட உள்ளனா். சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனையில், சட்டப் பேரவைத் தோ்தல் பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com