தமிழ்நாடு
கம்பம் பெண்கள் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா
தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி பெண்கள் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி பெண்கள் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் கல்லூரி செயலாளர் என்.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார், இணைச்சயலாளர் ரா. வசந்தன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ஜி. ரேணுகா அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
சமத்துவ பொங்கல் விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர் ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன் நன்றி கூறினார் அனைவருக்கும் இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது.
காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. மருத்துவ அலுவலர் சுதா தலைமை தாங்கினார். சித்த மருத்துவர் சிராஜ் தீன் முன்னிலை வகித்தார், சமத்துவ பொங்கல் சமைத்து வெளி நோயாளர்கள், சுகாதார நிலைய பணியாளர்களுக்கு மருத்துவர் முருகானந்தம் வழங்கினார்.