தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
குற்றாலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் மிதமான மழை பெய்துவந்தது. இதனால் குற்றாலம் பேரருவியில் பிற்பகலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் குற்றாலம் பேரருவி, பழையகுற்றாலம் அருவிகளில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து சுற்றுலாப்பயணிகள் ஐந்தருவி, புலியருவியில் குளித்து மகிழ்ந்தனர்.