சீர்காழி சட்டைநாதர் கோவிலில் தர்மபுரம் ஆதினம் வழிபாடு செய்தார்.
சீர்காழியில் தருமபுரம் ஆதினத்திற்கு உட்பட்ட ஸ்ரீ சட்டைநாதர் கோயில் உள்ளது. இக்கோயில் திருநிலை நாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார்.
இங்கு மலைமீது உள்ள கோயிலில் தோணியப்பர் உமாமகேஸ்வரி சட்டநாதர் ஆலய சுவாமிகள் அருள் பாலிக்கின்றனர். திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கிய தலமாக இக்கோயில் விளங்குகிறது பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு தர்மபுரம் ஆதினம் 26ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தனுர் மாத வழிபாடு நிகழ்ச்சிக்காக இக்கோயிலுக்கு வருகை புரிந்தார்.
முன்னதாக ஆபத்து காத்த விநாயகர் கோவிலில் வழிபாடு செய்தார் தர்மபுர ஆதினம். தொடர்ந்து மூலவர் பிரம்மபுரீஸ்வரர் திருநிலை நாயகி அம்பாள் தோணியப்பர் சட்டைநாதர் திருஞானசம்பந்தர் ஆகிய சுவாமி சன்னதிக்குச் சென்று வழிபாடு செய்தார். கோயில் சிவாச்சாரியார்கள் தருமபுரம் ஆதினத்திற்கு பிரசாதங்களை வழங்கினர்.