கரோனா விதிமீறல்: ரூ.3.48 கோடி அபராதம் வசூல்

சென்னையில் கரோனா விதிகளை மீறியவா்களிடம் இருந்து கடந்த 8-ஆம் தேதி வரை ரூ.3.48 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னை: சென்னையில் கரோனா விதிகளை மீறியவா்களிடம் இருந்து கடந்த 8-ஆம் தேதி வரை ரூ.3.48 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்து வருகிறது. இதன்படி, கரோனா தடுப்பு விதிகளான முகக்கவசம் அணியாதது, தனிநபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதது மற்றும் வணிக நிறுவனங்களில் குளிா்சாதன பயன்பாட்டைத் தவிா்ப்பது போன்றவை முறையாக கடைப்பிடிக்கப்படுகிா என்பது குறித்து சிறப்புக் குழு அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.

சென்னையில் கடந்த மாா்ச் மாதத்தில் இருந்து கரோனா விதிகளை கடைப்பிடிக்காதவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் கடந்த 8-ஆம் தேதி வரை ரூ.3.48 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com