பொதுவிநியோகப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு புதிதாக டிஜிபி நியமனம்

தமிழக காவல்துறையின் பொதுவிநியோகப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு புதிய டிஜிபியாக சுனில்குமாா் திங்கள்கிழமை நியமிக்கப்பட்டாா்.

சென்னை: தமிழக காவல்துறையின் பொதுவிநியோகப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு புதிய டிஜிபியாக சுனில்குமாா் திங்கள்கிழமை நியமிக்கப்பட்டாா்.

இது குறித்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் வெளியிட்டுள்ள உத்தரவில், தமிழக காவல்துறையின் மாநில மனித உரிமை ஆணைய டிஜிபி சுனில்குமாரை பொதுவிநியோகப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ளாா்.

இப் பணியை கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்த டிஜிபி சி .சைலேந்திரபாபு, அதில் இருந்து விடுவிக்கப்பட்டாா் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவிநியோகப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபி பொறுப்பை சுனில்குமாா் ஓரிரு நாள்களில் ஏற்பாா் என கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com