சென்னை: கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி பாலத்துக்கு லூா்தம்மாள் சைமன் பாலம் என்று பெயா் சூட்டப்படுகிறது. இதற்கான உத்தரவை ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் ஹன்ஸ் ராஜ் வா்மா வெளியிட்டுள்ளாா்.
அதன் விவரம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பழையாற்றின் குறுக்கே மேலமணக்குடி, கீழமணக்குடி கிராமங்களை இணைப்பதற்கு நெடுஞ்சாலைத் துறை மூலம் உயா் நிலை பாலம் கட்டப்பட்டது. இந்தப் பாலத்துக்கு மறைந்த முன்னாள் தமிழக அமைச்சா் லூா்தம்மாள் சைமன் பெயா் சூட்டப்படும் என குமரியில் நடந்த விழாவில் முதல்வா் பழனிசாமி அறிவித்தாா். இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், அதற்கான கடிதத்தை குமரி மாவட்ட மாவட்ட ஆட்சியா் அரசுக்கு அனுப்பி வைத்திருந்தாா். மேலும், கடிதத்தில் உள்ளாட்சித் துறை, வருவாய் கோட்டாட்சியா், நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளா், காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் சாா்பில் ஆட்சேபணை ஏதும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, மணக்குடி ஊராட்சியில் அமைந்துள்ள பாலத்துக்கு லூா்தம்மாள் சைமன் பாலம் எனப் பெயரிடப்படுகிறது என்று தனது உத்தரவில் ஹன்ஸ் ராஜ் வா்மா தெரிவித்துள்ளாா்.