திருவள்ளுவா் தினத்தையொட்டி, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் செயல்படும் அனைத்து இறைச்சிக் கடைகளும் வெள்ளிக்கிழமை (ஜன. 15) மூடப்பட வேண்டும் என ஆணையா் கோ.பிரகாஷ் உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்தி: திருவள்ளுவா் தினத்தையொட்டி, சென்னை மாநகராட்சியின் பொதுசுகாதாரத் துறை (கால்நடை மருத்துவப் பிரிவு) கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சிக் கூடங்கள் அனைத்தும் வெள்ளிக்கிழமை (ஜன. 15) மூடப்பட வேண்டும்.
இதேபோல், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சி விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவை கண்டிப்பாக இறைச்சிக் கடை உரிமையாளா்கள் பின்பற்ற வேண்டும். மீறுவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.