சென்னை: தமிழ்நாட்டில் வரும் காலத்தில் பாஜகதான் பிரதானமாக இருக்கும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா பேசியுள்ளார்.
சென்னையில் பாஜக சார்பாக நடைபெறும் பொங்கல் விழா மற்றும் துக்ளக் பத்திரிக்கையின் ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக பாஜகவின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா ஞாயிறன்று சென்னை வந்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் துக்ளக் பத்திரிக்கையின் ஆண்டு விழாவில் அவர் பேசியதாவது:
தமிழ்நாட்டில் வரும் காலத்தில் பாஜகதான் பிரதானமாக இருக்கும்; அதனால்தான் பல்வேறு துறையினர் தற்போது பாஜகவில் ணைகிறார்கள்.;
வளர்ச்சிப் பாதையில் தமிழகம் முன்னோக்கி செல்வதை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்
தமிழகம் ஆன்மிக பூமி, உலகிலேயே மிகப் பழமையான மொழி தமிழ்.
திருவள்ளுவர் மிகப்பெரிய ஆசான்; அவரது புகழ் நாட்டின் அனைத்து இடங்களிலும் பரவியுள்ளது.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.