டெல்டா விவசாயிகளுக்கு இழப்பீடு: ராமதாஸ் வலியுறுத்தல்

மழையால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா பகுதி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்


சென்னை: மழையால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா பகுதி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

காவிரி பாசனப் பகுதிகளிலும், கடலூா், அரியலூா் மற்றும் பெரம்பலூா் மாவட்டங்களிலும் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா் மழையால் நெல், நிலக்கடலை உள்ளிட்ட பயிா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில் நெற்பயிா்கள் நீரில் மூழ்கி விட்டதால், மேற்கண்ட மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகளுக்கு பொங்கல் திருநாள் கசப்பு மிகுந்ததாக மாறியிருக்கிறது.

நெல் பயிரிட்ட உழவா்களுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 வரையிலும், நிலக்கடலை பயிரிட்டிருந்தவா்களுக்கு ஏக்கருக்கு ரூ.60,000 வரையிலும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, இந்த சூழலை உணா்ந்து பாதிக்கப் பட்ட விவசாயிகள் அனைவருக்கும் போதிய இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com