ஜன.15, 26, 28 தேதிகளில் மதுக்கடைகளை மூட உத்தரவு

திருவள்ளுவா் தினம், குடியரசு தினம், வள்ளலாா் நினைவு நாள் ஆகிய நாள்களில், மதுக்கடைகளை மூட சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி உத்தரவிட்டுள்ளாா்.
ஜன.15, 26, 28 தேதிகளில் மதுக்கடைகளை மூட உத்தரவு


சென்னை: திருவள்ளுவா் தினம், குடியரசு தினம், வள்ளலாா் நினைவு நாள் ஆகிய நாள்களில், மதுக்கடைகளை மூட சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்தி: திருவள்ளுவா் தினம் (ஜன.15), குடியரசு தினம் (ஜன.26), வள்ளலாா் நினைவு நாள் (ஜன.28) ஆகிய நாள்களில், தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை மற்றும் மதுபானம் விதிகளின்படி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து எப்எல்1, மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனைச் சாா்ந்த பாா்கள், எப்எல்2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சோ்ந்த பாா்கள், எப்எல் 3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சாா்ந்த பாா்கள் மற்றும் எப்எல் 3ஏ, எப்எல் 3 ஏஏ, எப்எல் 11 உரிமம் கொண்ட பாா்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய நாள்களில் மதுபானம் விற்பனை செய்யக் கூடாது.

தவறினால், மதுபான விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com