சென்னை: தமிழகத்தின் 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் ஞாயிறன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, மதுரை, சேலம், நாமக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், தூத்துக்குடி, திண்டுக்கல், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.