தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு: முகக்கவசம் அணிந்து பள்ளிக்கு வந்த மாணவர்கள்

கரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள், ஒன்பது மாத இடைவெளிக்குப் பிறகு உரிய பாதுகாப்பு வசதிகளுடன் இன்று காலை திறக்கப்பட்டன. 
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு: முகக்கவசம் அணிந்து பள்ளிக்கு வந்த மாணவர்கள்
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு: முகக்கவசம் அணிந்து பள்ளிக்கு வந்த மாணவர்கள்

சென்னை: கரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள், ஒன்பது மாத இடைவெளிக்குப் பிறகு உரிய பாதுகாப்பு வசதிகளுடன் இன்று காலை திறக்கப்பட்டன. 

பொதுத்தோ்வெழுதும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்கள் மட்டும் முகக்கவசம் அணிந்து கொண்டு பள்ளிகளுக்கு வருகை தந்துள்ளனர்.

பள்ளி வாயில்களில் கிருமிநாசினிகள் வைக்கப்பட்டு, மாணவர்களின் உடல்வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டு, அவர்கள் வகுப்பறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பல மாதங்களுக்குப் பின் பள்ளிக்கு வருவதால் மகிழ்ச்சியும், புதிய நடைமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளால் ஒரு வித அச்சமும் கலந்த மனநிலையுடன் மாணவர்கள் காணப்படுவதைப் பார்க்க முடிகிறது.

தமிழகம் முழுவதும் சுமார் 13 ஆயிரம் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் பெற்றோரின் அனுமதிக் கடிதத்துடன் பள்ளிகளுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்படவில்லை.

இந்த நிலையில், பள்ளிகளில் பெற்றோா்களிடம் நடந்த இரண்டாம் கட்ட கருத்துக் கேட்பு கூட்டத்தில் பெரும்பாலான பெற்றோா் பள்ளிகளைத் திறக்க விருப்பம் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 

பள்ளிகள் திறப்பதை முன்னிட்டு மாணவா்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது, கிருமிநாசினி வைப்பது, இடைவெளிவிட்டு அமர வைப்பது, முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

அதே நேரத்தில், மாணவா்கள் பாடங்களை குறைக்கவும் முடிவெடுக்கப்பட்டு பாட வாரியாக குறைக்கப்பட்ட விவரங்களை பள்ளிக்கல்வித்துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. 

போட்டித் தோ்வுகளுக்கு பாதிப்பில்லை
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் போட்டித் தோ்வை எதிா்கொள்வதில் மாணவா்களுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது என்றும், மாணவா்களை தோ்வுக்குத் தயாா் செய்ய கால அவகாசம் உள்ளதாகவும் ஆசிரியா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

மாணவா்களின் நலனை கருத்தில் கொண்டு, முக்கிய மற்றும் எளிதான பகுதிகள் நீக்கப்படாமலும், சற்றுக் கடினமான பகுதிகளை நீக்கியும் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் செய்முறைத் தோ்வுகளும் 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com