சசிகலா விடுதலை அறிவிப்பு: கடையநல்லூரில் அமமுகவினர் கொண்டாட்டம்

கடையநல்லூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் புதன்கிழமை கொண்டாடினர்.
சசிகலா விடுதலை அறிவிப்பு: கடையநல்லூரில் அமமுகவினர் கொண்டாட்டம்
சசிகலா விடுதலை அறிவிப்பு: கடையநல்லூரில் அமமுகவினர் கொண்டாட்டம்


கடையநல்லூர் : கடையநல்லூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் புதன்கிழமை கொண்டாடினர்.

சிறையில் இருந்து சசிகலா 27ஆம் தேதி விடுதலை ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைத்தொடர்ந்து தென்காசி வடக்கு மாவட்டம் முழுவதும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

கடையநல்லூர் நகராட்சி பூங்கா அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலர் பொய்கை மாரியப்பன் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். மாவட்ட அவைத்தலைவர் பெருமையா பாண்டியன், இணைச் செயலர் சுமதி கண்ணன் ,எம்ஜிஆர் மன்ற செயலர் சொக்கம்பட்டி மாரியப்பன் ,சிறுபான்மை பிரிவு செயலர் கோதர்ஷா, கடையநல்லூர் நகர செயலர் கமாலுதீன், ஒன்றிய செயலர் பெரியதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com